மலாக்கா, பிப் 14 – மலாக்கா மஸ்ஜிட் தானாவில் ஆயுத கொள்ளையில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிர் தப்பிய பயங்கரமான அனுபவத்தை சந்தித்துள்ளார். விடியற்காலை மணி 6.17 அளவில் அந்த பெண் ஓட்டிச் சென்ற புரோட்டேன் சாகா காரை சந்தேகப் பேர்வழி ஒருவன் ஓட்டிவந்த காரினால் வழிமறித்துள்ளான்.
அந்த காரில் இருந்த முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் சமூராய் கத்தியுடன் அந்த பெண்ணை நெருங்கி கொள்ளையிடுவதற்காக அவரது காரின் ஜன்னலை தாக்கி மோசமான பாதிப்பை ஏற்படுத்தினர். எனினும் அந்த தாக்குதல் காரர்களிடமிருந்து அப்பெண் தப்பினார். தமது காரின் பின் கதவு வழியாக தப்பிய அப்பெண் சாலையோரத்தில் காத்திருந்த மற்றொரு வாகனத்தின் மூலம் தப்பிச் சென்றார். அச்சம்பவம் குறித்த 29 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.