கோலாலம்பூர்,டிச 28 – அமெரிக்க தூதரத்திற்கு அருகே நடைபெற்றுவரும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான விசாரணையை போலீஸ் தொடங்கியிருப்பதாக வங்சா மாஜு போலீஸ் தலைவர் அஷாரி அபு சமாஹ் தெரிவித்தார். பெர்மிட் இன்றி ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவது தொடர்பில் 2012ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் பெர்னாமாவிடம் கூறியுள்ளார். “Aksi Bertindak: Kepung Demi Palestine” ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இன்னும் வாக்குமூலம் எதனையும் எடுக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமைதான் அவர்களது ஆர்ப்பாட்டம் முடிவடையும் என்பதால் அதுவரை தாங்கள் காத்திருப்பதாக அஷாரி தெரிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் உத்தரவை பின்பற்றி வருகின்றனர். சாலைகளில் போக்குவரத்திற்கு அவர்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை. அதோடு சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீஸ் அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர் என அஷாரி கூறினார்