Latestமலேசியா

அரசாங்கத்திற்கான வாகனங்கள் குத்தகை தொடர்பில் டான்ஸ்ரீ பிரமுகரின் வீட்டில் எம்.ஏ.சி.சி சோதனை

கோலாலம்பூர், ஜன 20- அரசாங்கத்திற்கான வாகன தொகுதி விநியோகம் மற்றும் நிர்வாக குத்தகை தொடர்பில் டான்ஸ்ரீ விருதைக் கொண்ட வர்த்தக பிரமுகரின் வீட்டில் நேற்று பின்னிரவில் எம்.ஏ.சி.சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 4 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய குத்தகையில் சம்பந்தப்பட்ட நான்கு நிறுவனங்கள் மற்றும் அந்த வர்த்தகர் தொடர்புடைய மூன்று முதலீடு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அரசாங்கத்திற்கு வாகனங்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக அந்த டான்ஸ்ரீ பிரமுகர் இருந்துள்ளார் என எம்.ஏ.சி.சிக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன. மேலும் அந்த டான்ஸ்ரீ வர்த்தக பிரமுகரின் கட்டுப்பாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கணக்குகளும் மேல் நடவடிக்கைக்காக பறிமுதல் செய்ப்பட்டுள்ளன. எனினும் அந்த கணக்குகள் முடக்கப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!