Latestமலேசியா

புகைப்பட வதந்தியால் தாக்கினர் நால்வர் குற்றத்தை ஒப்பினர்

பத்து பஹாட், மே 14 – ஸ்ரீ காடிங் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவரின் புகைப்படத்தை தனிக்கை செய்தது தொடர்பான வதந்தியை தொடர்ந்து ஜூனியர் மாணவர் ஒருவரை தாக்கிய குற்றத்தை அப்பள்ளியைச் சேர்ந்த பதின்மவயதுடைய நான்கு பையன்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்.

16 முதல் 17 வயதுக்குட்பட்ட அந்த நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி அருண் நோவல் தாஸ் முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது அவர்கள் அதனை ஒப்புக்கொண்டனர். மே 6ஆம் தேதியில் பள்ளியின் கழிப்பறைக்குள் 15 வயது மாணவனை தாக்கி காயம் விளைவித்ததாக அந்த நால்வருக்கு எதிராக கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 323ஆது விதியின் கீழ் 34 ஆவது பிரிவுடன் படிக்கப்பட்ட அந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகப்பட்டசமாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததோடு அவர்கள் இச்சம்பவம் குறித்து ஸ்ரீ காடிங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். குற்றச்சாட்டப்பட்ட நான்கு பையன்களுக்கும் தலா 1,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு அவர்கள் மீதான வழக்கு ஜூலை 2ஆம்தேதி மறு விசாரணைக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!