Latestஉலகம்

ஹட்யாய் சாலைகளில் சட்டவிரோத பந்தயம்; 10 மலேசியர்களுக்கு அபராதம்

சொங்க்லா, மே-19 – தாய்லாந்து, ஹட்யாயில் ஆபத்தான முறையில் வாகனமோட்டியதற்காக 10 மலேசியர்களுக்கு அந்நாட்டு போலீஸ் அபராதம் விதித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட அந்த 10 பேரும், மாற்றியமைக்கப்பட்ட கார்களில் சட்டவிரோத சாலை பந்தயத்தில் ஈடுபட்டனர்.

விடியற்காலம் 1.30 மணிக்கு இரைச்சல் தாங்காமல் குடியிருப்பாளர்கள் புகார் செய்யவே, போலீஸ் விசாரணையில் இறங்கியது.

CCTV கேமரா பதிவுகள் துணையுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைதுச் செய்யப்பட்டனர்.

10 பேரும் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, ஆளுக்கு 640 ரிங்கிட்டை அபராதமாகச் செலுத்தியதும் விடுவிக்கப்பட்டனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!