Latestமலேசியா

பொழுதுபோக்கு மையத்தில் மியன்மார் பெண்கள்; காவல்துறையினர் சோதனை

கோலாலம்பூர் – நேற்றிரவு, தேசா ஸ்ரீ ஹர்த்தாமாஸில் பெண் வாடிக்கையாளர் சேவையை வழங்கும் (GRO) பொழுதுபோக்கு மையம் ஒன்றில், காவல் துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அதிரடி நடவடிக்கையில், மாதத்திற்கு 3,000 ரிங்கிட் வரை வருமானம் ஈட்டும் GROக்கள் என நம்பப்படும் 5 பெண்கள் உட்பட, 22 முதல் 35 வயதுடைய 10 மியன்மார் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா தெரிவித்துள்ளார்.

நோட்டுப் புத்தகங்கள், ஆடியோ உபகரணங்கள் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுதுபோக்கு மையம் உரிமம் இல்லாமல் இயங்குவதும், வெளிநாட்டு தொழிலாளர்களை, தகாத வேலைக்கு அமர்த்தியதும் கண்டறியப்பட்டுள்ளதாக டத்தோ ருசடி கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று அறியப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!