Latestஉலகம்

தைவான் மருத்துவமனையில் தீ விபத்து; 9 போர் பலி

தைவான், அக்டோபர் 3 – இன்று காலையில் தெற்கு தைவானில் கிரோத்தேன் (Krathon) சூறாவளி தாக்கி, மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

சூறாவளியால் தைவானின் தெற்கில் நிலச்சரிவு ஏற்பட்ட அதே நாளில், இந்த தீ விபத்தும் பிங்துங் (Pingtung) மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

பலத்த காற்றும், கனமழையாகவும் இருந்ததால், அப்பகுதியில் மீட்பு நடவடிக்கையை கடினமாகியுள்ளதாக அம்மாவட்ட அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தீ கொளுந்து விட்டு எரியும் புகைப்படத்தையும், தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் ஆகியவை கொண்டு தீயணைப்பு பணியாளர்கள் பணியிலிருக்கும் புகைப்படங்களையும் அது வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!