
புதுடெல்லி, மே 26 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, நூற்றுக்கணக்கான சரக்கு பெட்டிகள் மற்றும் அபாயகரமான 640 இரசாயன கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று, வெள்ளம் காரணமாக தென்னிந்திய கடலில் மூழ்கியது.
கப்பலை மீட்கும் முயற்சிகள் தோல்வியடைந்தபோதும், அதனுள் இருந்த 24 பணியாளர்களும், இந்திய கடலோர காவல்படை (ICG) மற்றும் கடற்படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மூழ்கிய கப்பலில், ஆபத்தான சரக்குகள், கால்சியம் கார்பைடு, டீசல் மற்றும் உலை எண்ணெய் போன்றவை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கப்பலிலிருந்து கடலில் மேம்பட்ட எண்ணெய் கசிவுகளைக் கண்டறியும் பணிகளை கடலோர காவல்படையினர் (ICG), மேற்கொண்டு வருகின்றனர் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.