புத்ரா ஜெயா , நவ 15 – பாலஸ்தீன், காஸா வட்டாரத்திற்கு மருத்துவ குழு ஒன்று அனுப்பிவைக்கப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்திருக்கிறார். தொண்டூழிய அடிப்படையில் காஸாவுக்கு செல்லும் மருத்துவ குழுவில் இடம்பெற விரும்பும் அமைச்சின் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சுகாதார அமைச்சு அனுமதி வழங்கிய பின் மருத்துவ குழுவில் இடம்பெறும் சுகாதார அமைச்சின் பணியாளர்கள் காஸாவில் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என டாக்டர் ஸாலிஹா கூறினார்.
மருத்துவ குழுவில் இடம்பெற விரும்புவோர் இணையம் மூலமாக மனுச் செய்யலாம். செம்பிறைச் சங்கம், மெர்சி மலேசியா, மற்றும் சம்பந்தப்பட்ட இதர அரசாங்க நிறுவனங்களுடன் சுகாதார அமைச்சில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் கூறினார். போர் சூழ்நிலைப் பகுதியில் மலேசிய மருத்துவ பணிக்குழு பணியாற்ற வேண்டியிருப்பதால் மருத்துவ குழுவினர் காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் ஸாலிஹா தெரிவித்தார்.