கோலாலம்பூர், ஜன 7 – பள்ளி மாணவர் ஒருவரை கொடுமைப்படுத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று வைராலனதைக் குறித்து கல்வி அமைச்சு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கம் என்றும் இந்த விவகாரம் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
வைரலான காணொளியில், மாணவர் ஒருவர் புதர்களுக்கு மத்தியில் போராடி கொண்டிருக்கையில் மற்றொரு மாணவன் அவன் மேல் அமர்ந்த நிலையில் பிளாஸ்டிக் பையில் நிரப்பியிருந்த உலர்ந்த இலைகளை தலையில் கொட்டி கொடுமைப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
இதனிடையே, கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற பகடிவதைச் சம்பவங்களை அமைச்சு பொறுத்துக் கொள்ளாது என்று கல்வி அமைச்சு அதன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இவ்விவகரத்தில் குற்றம் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுவதைப் பள்ளி தரப்பினர் உறுதி செய்ய வேண்டும். மேலும், அந்த காணொளியை யாரும் சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டாம் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.