கிள்ளான், பிப்ரவரி 7 – சிலாங்கூர், கிள்ளானுக்கு அருகில், SKVE நெடுஞ்சாலையிலிருந்து வெளியாகும் இடத்தில், டிரெய்லர் ஒன்று, சாலை தடுப்பை மோதி, பள்ளத்தில் விழுந்ததில், 20 வயது மதிக்கத்தக்க “கிளிண்டன்” அல்லது உதவி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டிரெய்லரில் இருந்து வெளியே 10 மீட்டர் தூரத்திற்கு தூக்கியெறியப்பட்ட டிரெய்லர் ஓட்டுனர், பலத்த காயங்களுக்கு இலக்கானார்.
இன்று காலை மணி 10.51 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
கொள்கலனை ஏற்றி இருந்த அந்த டிரெய்லர், கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.