Latestமலேசியா

பாச்சோக்கில் தீயணைப்பு வாகனம் மோதி ICU-வில் உயிருக்குப் போராடும் 4 வயது பெண் குழந்தை

கோத்தா பாரு, ஜனவரி-18-கிளந்தான், பாச்சோக்கில் குடும்ப தின நிகழ்ச்சியில் நடந்த சோகமான விபத்தில், 4 வயது பெண் குழந்தை தீயணைப்பு துறையின் MPV வாகனத்தால் மோதப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறது.

Nurul Afia Raisha Muhamad Shamsul 2 வாரங்களாக குபாங் கெரியான் HUSM மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம், வலது தோள் எலும்பு முறிவு மற்றும் சில விலா எலும்புகள் முறிவு ஆகியவற்றால் அக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சுப் பகுதியில் 3 சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இலேசான முன்னேற்றம் தெரிந்தாலும், குழந்தை இன்னும் அபாயக் கட்டத்திலிருந்து வெளியேறவில்லை என அதன் பெற்றோர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஜனவரி 3-ஆம் தேதி காலை 10.45 மணியளவில், பாச்சோக்கில் உள்ள மக்கள் விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்தது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, பின்னால் riverse செய்த MPV வாகனம் மோதியது.

போலீஸில் புகார் செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!