Latestமலேசியா

கிளந்தானில், சியாமிய சமூகத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இசைநிகழ்ச்சி; சர்ச்சையை தூண்டியுள்ளது

கோலாலம்பூர், நவம்பர் 28 – கிளந்தானில் அண்மையில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில், அரை குறை ஆடையில் பெண்கள் நிகழ்ச்சியை வழிநடத்தும் வீடியோ ஒன்று வைரலாகி, சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதத்தை தூண்டியுள்ளது.

கிளந்தான் மாநில அரசாங்கத்தின் முரண்பாடான நிலைப்பாட்டை குறிக்கும் அந்த வீடியோவிற்கு, கடும் கண்டனம் எழுந்துள்ளது.

குறிப்பாக, இதுவரை நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இசைநிகழ்ச்சிகளை குறை கூறி வந்த பாஸ் அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

“கிளந்தானில், அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த யார் அனுமதி தந்தது?”

“உடனடியாக விசாரணை மேற்கொள்ளுங்கள்” என அடுக்கடுக்காக கண்டனங்கள் குவிந்து வரும் வேளை; சிலர் அந்நிகழ்ச்சியை தற்காத்து பேசியுள்ளனர். ஆண்டுதோறும், கிளந்தான் சீன பெளத மதத்தினர் அந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது வழக்கம் தான் எனவும், குறிப்பிட்ட வளாகத்தில் மட்டுமே அது நடத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அது கிளந்தானில் அதிகமாக வாழும் சியாமியர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் யாரும் சினமடைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!