கூச்சிங், ஜன 20 – சரவாக் மாநிலத்தின் 8ஆவது ஆளுநராக நியமிக்கப்படுவதற்காக மேலவை தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சரவா மாநில ஆளுநராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு முதல் சரவா மாநிய ஆளுநராக துன் பெஹின் ஸ்ரீ அப்துல் தைப் மஹ்மூத் இருந்து வருகிறார். அடுத்த மாதம் இறுதியில் அவரது ஆளுநர் பதவிக்கான தவணை முடிவுக்கு வருகிறது.