ஜித்ரா, மார்ச் 23 – கெடா, ஜித்ராவில் டிரேய்லர் லாரி ஸ்கூட்டருடன் மோதிய விபத்தில், 31 வயது கணவர் உயிரிழந்த வேளை, மனைவியும் மகனும் காயமடைந்தனர்.
Napoh அருகே வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் நேற்றிரவு 10.50 மணியவில் அக்கோர விபத்து நிகழ்ந்தது.
Changlun-னில் இருந்து வந்துக் கொண்டிருந்த டிரேய்லர், முன்னே சென்ற ஸ்கூட்டரை முந்திச் செல்வதற்காக வெட்டி சாலையில் நடுவே போன போது தான், ஸ்கூட்டரை மோதியதை டிரேய்லர் ஓட்டுநர் உணர்ந்திருக்கிறார்.
மூவரும் கீழே விழுந்ததில் கணவர் டிரேய்லர் லாரியின் டையரில் அரைப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டார்.
31 வயது மனைவியும் 4 வயது பையனும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.