ராஃபா, நவ 10 – இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் காயம் அடைந்த பாலஸ்தீனர்களும் மற்றும் வெளிநாட்டு கடப்பிதழ்களை வைத்திருப்பவர்களும் காஸாவிலிந்து வெளியேறும் பொருட்டு காஸா – எகித்து வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் தரப்பினருக்கும் இஸரேல்லுக்குமிடையே நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வழித்தடம் மூடப்பட்டிருந்தது. இஸ்ரேல் எல்லையிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வெளியேறுவதற்காக சிறுவர்கள் உட்பட காயம் அடைந்தவர்கள் காத்திருக்கும் காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. காஸாவிலிருந்து எல்லையை கடந்து எகிப்துக்கு வெளியேறும் நடவடிக்கை மிகவும் மெத்தனமாக இருப்பதாக ஹமாஸ் தரப்பின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Articles
Check Also
Close