குவாங் மூசாங், டிச 4 – கிளந்தானில் குவா மூசாங் வட்டாரத்தில் Kampung Kuala Tol என்ற கிராமத்தில் கடந்த மூன்று வாரங்களில் புலியினால் தாக்கப்பட்டு இதுவரை மூவர் கொல்லப்பட்ட வேளையில் அங்கு குடியிருக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தற்போது பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். 55 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கிராமத்தில் குடியிருக்கும் மக்கள் முதல் முறையாக புலி நடமாட்டத்தினால் கடந்த மூன்று வார காலமாக பெரும் அச்சத்தில் இருப்பதாக 81 வயதுடைய முதியர்வ Mohd Zain Ismail தெரிவித்தார். குடியிருக்கும் மக்களுக்கும் அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் அந்த புலியை பிடிப்பதில் வனவிலங்குத்துறை முழு கவனம் செலுத்த வேண்டும் என Kampung Kuala Tol மக்கள் வலியுறுத்தினர்.