Latestஉலகம்மலேசியா

ஆசியான் – அமெரிக்கா சந்திப்புக்கு டிரம்பின் அனுமதியைக் கோரும் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர் – மே-26 – வாஷிங்டனில் இருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஆசியான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் லங்காவியில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, அக்கடிதம் அனுப்பப்பட்டதாக, கோலாலம்பூரில் இன்று 46-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் தொடக்கத்தில் அவர் கூறினார்.

இது நமது விருப்பங்களை மட்டுமல்ல, நமது பொறுப்புகளையும் குறிக்கிறது. ஆசியானின் எதிர்காலம் “சமமான, நிலையான வளர்ச்சி மற்றும் நீடித்த மீள்தன்மை ஆகிய இரட்டைத் தூண்களில்” சார்ந்துள்ளது என்றார் அவர்.

ஆசியான் – அமெரிக்க சிறப்பு மாநாட்டுக்குக்கான தேதியை நிர்ணயிக்க, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசானும், வெள்யுறவு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும், ஏப்ரல் 3-ஆம் தேதியே, மலேசியா, லாவோஸ், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள் மீதும் டிரம்ப் பரஸ்பர இறக்குமதியை விதித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதில்லை என, ஆசியானின் 10 உறுப்பு நாடுகளும் அப்போது தெரிவித்திருந்தன.

வரி தொடர்பில் அந்தந்த நாடுகள் தனித்தனியாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்தினாலும், ஆசியான் கூட்டமைப்பாக அதில் களமிறங்கினால் தான் கூடுதல் நன்மை என டத்தோ ஸ்ரீ அன்வார் கருதுகிறார். ஆசியானுக்கு மலேசியா இவ்வாண்டு தலைமையேற்றிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!