Latestஇந்தியா

தஞ்சை பெரியக் கோயிலில் நடனமாடி ரீல்ஸ் செய்த பெண்களுக்குக் குவியும் கண்டனம்; மலேசியர்களா என விவாதம்

தஞ்சாவூர், மே-3 – தமிழகத்தின் தஞ்சை பெரியக் கோயிலில், 4 பெண்கள் நடனமாடி ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவி கண்டனங்களைப் பெற்று வருகிறது.

சித்திரைப் புத்தாண்டு அன்று அப்பெண்கள் பாவாடை தாவணியில் கோயிலின் படிகட்டுகளில் நடனமாடியுள்ளனர்.

இது கோயிலின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் வகையில் உள்ளதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக, உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோயிலுக்குள் கைப்பேசிகளைக் கொண்டுச் செல்ல தடை விதிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

என்றாலும் அவ்வீடியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

சினிமா படப்பிடிப்புகள் அங்கு நடைபெற அனுமதிக்கும் போது இப்பெண்கள் ஆடியதில் என்ன தவறு என கேட்பவர்களும் உண்டு.

தவிர, அப்பெண்கள் பாவாடை தாவணியில் கலாச்சாரமாகத் தான் உள்ளனர் என பலர் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, அப்பெண்கள் மலேசியர்கள் என சில வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டுள்ள நிலையில், அது இன்னும் உறுதிபடுத்தப்படவில்ல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!