Latestமலேசியா

மக்களின் பிரச்னையை தீர்க்கவில்லை என்றால் மலாய்க்காரர் அல்லாதார் அன்வாரை கைவிடுவர்; பெர்சத்து கூறுகிறது

கோலாலம்பூர், நவ 23 – மக்களின் பிரச்னைக்கு குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால் பக்காத்தான் ஹராப்பானிலுள்ள இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அன்வாரிடமிருந்து விலகி பெரிக்காத்தான் நேசனசலுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மாட் ஃபய்சல் வான் அஹ்மாட் தெரிவித்திருக்கிறார். மடானி அரசாங்கம் வெளியே பார்ப்பதற்குத்தான் அழகாக இருக்கிறது. ஆனால் உள்ளே பல பிரிவுகளாக இருப்பதாக அவர் கூறினார். பக்காத்தான் ஹராப்பானின் தீவிர ஆதரவாளர்களான சீன சமுகத்தினர் அன்வாரிடமிருந்து விலகி விரைவில் பெரிக்காத்தான் நேசனலை ஆதரிப்பார்கள் என அஹ்மாட் ஃபய்சல் கூறினார். பெர்சத்து இளைஞர் பிரிவின் கூட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!