கோலாலம்பூர், நவ 23 – மக்களின் பிரச்னைக்கு குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால் பக்காத்தான் ஹராப்பானிலுள்ள இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அன்வாரிடமிருந்து விலகி பெரிக்காத்தான் நேசனசலுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மாட் ஃபய்சல் வான் அஹ்மாட் தெரிவித்திருக்கிறார். மடானி அரசாங்கம் வெளியே பார்ப்பதற்குத்தான் அழகாக இருக்கிறது. ஆனால் உள்ளே பல பிரிவுகளாக இருப்பதாக அவர் கூறினார். பக்காத்தான் ஹராப்பானின் தீவிர ஆதரவாளர்களான சீன சமுகத்தினர் அன்வாரிடமிருந்து விலகி விரைவில் பெரிக்காத்தான் நேசனலை ஆதரிப்பார்கள் என அஹ்மாட் ஃபய்சல் கூறினார். பெர்சத்து இளைஞர் பிரிவின் கூட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்,
Related Articles
கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக DAPயின் Pang Sock Tao போட்டி
4 hours ago
“நாங்கள் எதிர்ப்போம்”; Tik Tok தடை செய்யும் மசோதாவில் ஜோ பைடன் கையெழுத்திட்டதிற்கு டிக் டோக் தலைமை நிர்வாக அதிகாரி பதில்
4 hours ago
Check Also
Close