Latestமலேசியா

கணபதிராவ் ஏற்பாட்டில் கிள்ளானில் B40 குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை அன்பளிப்பு

கிள்ளான், அக்டோபர்-20, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில் கிள்ளானில் வசதி குறைந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த 50 பிள்ளைகளுக்கு தீபாவளி துணிமணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

கிள்ளான் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டிலான Lights Of Deepavali எனும் அந்நிகழ்வு WWRC மற்றும் ஸ்ரீ ராசி சில்க் செண்டர் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

கிள்ளான், லாடாங் புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அந்த 50 மாணவர்களும், ஜாலான் தெங்கு கிளானாவில் உள்ள ஸ்ரீ ராசி பட்டு மாளிக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தங்களுக்குப் பிடித்த புத்தாடைகளை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிந்தது குறித்து மனநிறைவு தெரிவித்த கணபதிராவ், இது போன்ற விழாக் காலங்களில் வசதி குறைந்தவர்களையும் நாம் மறந்திடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

அதே நிகழ்வில் லாடாங் புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கும் 4,000 ரிங்கிட் நிதியுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.

பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் Tony Leong Tuck Chee, கிள்ளான் அரச மாநகர மன்ற உறுப்பினர்களான யுகராஜா, குமணன், பள்ளித் தலைமையாசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் அதில் பங்கேற்றனர்.

இவ்வேளையில், தீபாவளி பெருவிற்பனை காலத்தில் தெங்கு கிளானாவில் ஏற்படும் கார்நிறுத்துமிட பிரச்னை குறித்தும் கணபதிராவ் பேசினார்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி கார்கள் இழுத்துச் செல்லப்படும் விவகாரத்தை மாநகர மன்ற அதிகாரிகள் முறையாக கையாள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!