Latestமலேசியா

திரெங்கானுவில் அரிய கழுகு கூடு முதன்முறையாக கண்டுபிடிப்பு

கோலாலம்பூர் , மே 22 -மலேசியாவில் முதன்முதலில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வேட்டையாடும் பறவை கூடு கட்டுவது இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரெங்கானுவில் பதிவாகியது. இது உலக அளவில் கூட அரிதாக ஒன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக அடர்த்தியான மலை மற்றும் மலைப்பகுதி காடுகளில் வசிக்கும் ரூஃபஸ்-பெல்லிட் கழுகு ( Rufous -bellied ) அல்லது லோபோட்ரியோர்கிஸ் கீனெரியின் கூடு, பிப்ரவரி மாத இறுதியில் ஒரு களப்பயணத்தின் போது ஆராய்ச்சியாளர் Anuar McAfee என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்மையாக தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் Rufous bellied கழுகு கூடு கட்டும் பதிவுகள் அதன் அறியப்பட்ட வரம்பிற்குள் கூட அரிதாகவே இருப்பதாகக் சுல்தான் ஜைனல் அபிடின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த McAfee கூறினார்.
ஆனால் இதற்கு முன்பு அந்த கழுகின் எந்தக் கூடும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அதுவே குறிப்பிடத்தக்கது என்று “திரெங்கானு பறவைகள்” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான அவர் தெரிவித்திருக்கிறார்.

மலேசியாவில் இந்தக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது பாதுகாப்பு உயிரியல், பல்லுயிர் கண்காணிப்பு மற்றும் வன சுற்றுச்சூழல் மதிப்பீட்டிற்கு மிகவும் மதிப்புமிக்கது எனசுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளருமான மெக்காஃபி ( McAfee)
கூறினார். இந்த ஆண்டு அனைத்துலக உயிரியல் பன்முகத்தன்மை தினத்திற்கான கருப்பொருளான “இயற்கையுடன் நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி” என்பதன் அடிப்படையில் இது அடையாள ரீதியாகவும் பொருத்தமானது . மலேசியாவில் இதுபோன்ற ஒரு சிறப்பு ராப்டர் கழுகு கூடு கட்டுவதை நேரில் கண்டு உறுதிப்படுத்துவது உண்மையிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று McAfee தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!