பத்து பஹாட், ஜனவரி 29 – பாராங் கத்தியை கொண்டு தாக்கி ஆடவர் ஒருவருக்கு காயம் விளைவித்த நிறுவன மேலாளர் ஒருவருக்கு ஏழாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
42 வயது டான் வியூ தியான் தமது எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தின், அவன் ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
முன்னதாக, இம்மாதம் 23-ஆம் தேதி, அதிகாலை மணி 3.30 வாக்கில், பத்து பஹாட், தாமான் புளோரா உத்தாமாவில், 26 வயது தியூ யுவான் ஜுனுக்கு பாரங் கத்தியை கொண்டு தாக்கி காயம் விளைவித்ததாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.
அச்சம்பவம் நிகழ்ந்த இரு நாட்களுக்கு பின்னர், பாதிக்கப்பட்டவர் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையின் அவன் கைதுச் செய்யப்பட்டான்.