கோலாலம்பூர், டிச 11 – மிகவும் ஆருடம் கூறப்பட்ட அமைச்சரவை மாற்றம் இறுதியாக நாளை நடக்கும் என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. சில அமைச்சுக்களின் அமைச்சர்களும் துணையமைச்சர்களும் மாற்றத்திற்கு உட்படுவார்கள் என நம்பப்படுகிறது.
அமைச்சர் எண்ணிக்கை கூடுவதற்கான வாய்ப்பிறுப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை இஸ்தானா நெகாராவில் பதவி ஏற்புக்கான ஒத்திகை பார்க்கப்பட்டு பதவியேற்புச் சடங்கு மதியம் 3.00 மணிக்கு நடைப்பெறக்கூடும் என அறியப்படுகிறது.
இதில் இந்தியர்கள் யார் இடம்பெறுவார்கள் யார் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்ப்பு சமூகத்தில் கூடியுள்ளது.