
ஜெலி, கிளந்தான், மே 21- கிளந்தான் ஜெலியில், தகுந்த ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ் கொண்டிராத வெளிநாட்டவர்களை, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற கடத்தல் குழு ஒன்றை கிளந்தான் காவல் துறையினர் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனங்களை வழிமறித்தபோது, 24 மற்றும் 31 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள், 20 முதல் 43 வயதுக்குட்பட்ட 10 வெளிநாட்டினரை கடத்தியது தெரியவந்துள்ளதென்று ஜெலி மாவட்ட காவல்துறைத் தலைவர் கமருல்சமான் ஹருன் (Kamarulzaman Harun) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இவ்வழக்கு மனித கடத்தல் மற்றும் குடியேற்ற குற்றங்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நமது நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டும் முயற்சியில் கிளந்தான் காவல்துறை தொடர்ந்து ஈடுபடுமென்று கமருல்சமான் கூறியுள்ளார்.