Latestமலேசியா

அமெரிக்காவில் 20 பேரை ஏற்றிச் சென்ற வான்குடை சாகச விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது

வாஷிங்டன், ஜூன்-9 – அமெரிக்காவின் டென்னஸீ (Tennessee) மாநிலத்தில் 20 பேருடன் சென்ற வான்குடை சாகச விமானம் ஞாயிறன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

அது, வானிலிருந்து குதிக்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் இரட்டை இயந்திர விமானமாகும்.

Tullahoma விமான நிலையத்தில் ஞாயிறு நண்பகலில் அது விழுந்ததில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

காயமடைந்த மூவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

மேலுமொருவருக்கு சற்று மோசமான காயம் என்பதால் அவர் தரை வழியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிராய்ப்பு காயங்களுக்கு ஆளானவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

விமானம் விழுந்த இடத்தருகே இருந்தவர்களுக்குக் காயமேதும் ஏற்படவில்லை.

அதே போல் விமான நிலையத்திற்கோ பொது சொத்துக்களுக்கோ சேதமில்லை என அதிகாரிகள் கூறினர்.

விமான விபத்துக்கான காரணத்தை கூட்டரசு வான் போக்குவரத்து அதிகாரத் தரப்பு ஆராய்ந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!