Latestமலேசியா

இல்லாத முதலீடு திட்டம்; முகநூலில் RM107,810 இழந்த 52 வயது தாதி

குவாந்தான், ஜூன் 3 – அண்மையில், முகநூலில் வெளியான போலி முதலீடு திட்டத்தின் விளம்பரத்தில் ஈர்க்கப்பட்டு, 107,810 ரிங்கிட் தொகையை இழந்துள்ளார் குவாந்தானைச் சார்ந்த செவிலியர் ஒருவர்.

`IQ Option’ என்ற பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகத்தில் வளம் வந்த அப்போலி கும்பல், 350 ரிங்கிட் பணத்தை முதலீடு செய்தால், 12,000 ரிங்கிட் வரை இலாப பணம் கிடைக்குமென்று உறுதியளித்துள்ளதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆசை வார்த்தைகளை நம்பி, 107,810 ரிங்கிட்டை முதலீடு பணமாக செலுத்திய அவருக்கு, எந்தவொரு இலாபமும் கிடைக்காத போதுதான், தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடும், பொதுமக்கள் இத்தகைய மோசடிக்கு ஆளாகாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!