Latestமலேசியா

இஸ்மாயில் சப்ரி மீதான விசாரணையில் 20 விழுக்காடு மட்டுமே பூர்த்தி -அசாம் பாகி

புத்ரா ஜெயா, ஏப் 29 – முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான விசாரணையில் 15 முதல் 20 விழுக்காடு மட்டுமே மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டு வாரங்களில் விசாரணை மீண்டும் தொடங்கும் என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ..சி.சியின் (MACC) தலைவர் அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.

விசாரணையை எளிதாக்குவதற்குத் தேவையான பல ஆவணங்களைத் தயாரிக்க இஸ்மாயிலிடம் MACC கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

விசாரண தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இது அவரது சொத்து அறிவிப்பு தொடர்பானது. சில ஆவணங்களைத் தயாரிக்குமாறு நாங்கள் அவரிடம் கேட்டுள்ளோம், அவர் அவ்வாறு செய்தவுடன், இரண்டு வாரங்களில் அவரை மீண்டும் அழைப்போம் என இன்று நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் அசாம் பாகி கூறினார்.

சொத்து பிரகடனம் தொடர்பான விசாரணைகளுக்கு பொதுவாக அதிக நேரம் தேவைப்படும் என்றும், நோட்டிஸ் அனுப்பப்பட்டால் அதனைப் பெற்றவர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட தங்கள் சொத்துக்களின் ஆதாரங்களை Macc யின் திருப்திக்கு ஏற்ப கணக்கிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போது, ​​சுமார் 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடுவரை விசாரணையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இஸ்மாயில் சப்ரி தனது சொத்துக்களில் ஒரு பகுதியை அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பு துல்லியமானதா இல்லையா என்பதை நாங்கள் சரிபார்ப்பதுதான் முக்கியம் என்று அசாம் பாக்கி கூறினார். Bera நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணையில் நான்கு மணி நேரம் செலவிட்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!