
ஆமதாபாத் – ஜூன் 13 – ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நொறுங்கி விழுந்த ஏர் இந்திய விமானத்தைத் தவறவிட்ட பெண் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தை அடைய முடியவில்லை என்று கூறியுள்ளார் அப்பெண்.
அந்தச் சாலை நெரிசல்தான் அவரை காப்பாற்றிருக் கின்றதென்றும், அச்சம்பவத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தை
அறிந்த போது தான் மனஉளைச்சளுக்கு ஆளானதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இறைவனுக்கு நன்றி கூறி கொண்ட அவர், இரண்டாண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்து திரும்பும்போது இத்தகைய நிகழ்வு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது என்கின்றார்.