Latestஉலகம்மலேசியா

கடப்பிதழை மறந்த விமானி; பாதியிலேயே திரும்பிய லாஸ் ஏஞ்சலஸ் – ஷங்ஹாய் விமானம்

லாஸ் ஏஞ்சலஸ், மார்ச்-26- விமானிகளில் ஒருவர் கடப்பிதழை மறந்து வைத்து விட்டதால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸிலிருந்து சீனாவின் ஷங்ஹாய் புறப்பட்ட யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் பாதியிலேயே திரும்ப வேண்டியக் கட்டாயத்திற்கு ஆளானது.

அந்த UA 198 விமானம் மார்ச் 22-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஷங்காய் புறப்பட்டது.எனினும் சில மணி நேரங்களிலேயே விமானத்தை திருப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் சான் ஃபிரான்சிஸ்கோவில் விமானம் தரையிறங்கியது.

பிறகு மாற்று விமானி ஏற்பாடு செய்யப்பட்டு அன்றிரவு 9 மணிக்கு இலக்கை நோக்கி பயணம் தொடர்ந்தது.

அசல் அட்டவணையைக் காட்டிலும் 6 மணி நேரங்கள் தாமதமாக விமானம் ஷங்ஹாய் சென்றடைந்தது.

பயணிகளுக்கு உணவுப் பற்றுச்சீட்டுகளும் இழப்பீடும் வழங்கப்பட்டன.

இந்த விமானம் தாமதமானதால், ஷங்ஹாயிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் புறப்பட வேண்டிய விமானமும் தாமதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!