
கோலாலம்பூர், அக்டோபர்-29, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடிக்கு எதிராக தொடுத்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் இன்று நீதிமன்றம் திரும்பினார்.
நுரையீரல் தொற்று காரணமாக 99 வயது மகாதீர் அக்டோபர் 16-ஆம் தேதி தேசிய இருதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டதால், முன்னதாக அவரின் சாட்சியமளிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் குணமடைந்து IJN-னிலிருந்து வீடு திரும்பியவர், முழு ஓய்வுக்குப் பிறகு இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வந்திருந்தார்.
அவருடன் உதவியாளர்களும் குடும்ப மருத்துவரும் வந்திருந்தனர்.
2017-ஆம் ஆண்டு ஆற்றிய ஓர் உரையில், தமது உண்மைப் பெயர் மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி என கூறியதற்காக, சாஹிட் மீது மகாதீர் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.