Latestமலேசியா

குளுவாங்கில் தடம்புரண்ட கார் வீட்டுக்கு வெளியே பெருக்கிக் கொண்டிருந்த முதியவரை மோதியது

குளுவாங், மே-8 – ஜோகூர், சிம்பாங் ரெங்கம், தாமான் தியாரா பெர்டானாவில் வீட்டின் முன்பு பெருக்கிக் கொண்டிருந்த 61 வயது முதியவர், தடம்புரண்டு வந்த காரால் மோதப்பட்டார்.

நேற்று காலை 8.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக குளுவாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் பஹ்ரின் மொஹமட் நோ கூறினார்.

வேலை முடிந்து ஜோகூர் பாருவிலிருந்து சிம்பாங் ரெங்கம் திரும்பும் வழியில், 37 வயது தாதி ஓட்டி வந்த Toyota Yaris கார், கட்டுப்பாட்டை இழந்து அம்முதியவரை மோதியது.

அதில் இடது கால் எலும்பு முறிவுக்கு ஆளானதோடு நெற்றியிலும் அவர் காயமுற்றார்.

தாதிக்கு நெஞ்சுப் பகுதியில் இலேசான வலி ஏற்பட்டது.

அங்கிருந்த மின்சார கம்பத்தையும் கார் மோதி அது உடைந்து விழுந்தது.

இருவருமே குளுவாங் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவ்விபத்து CCTV கேமராவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!