Latestமலேசியா

கோலாலம்பூர் உணவகத்தில் அழையா விருந்தாளி; உணவின் தூய்மை குறித்து நெட்டிசன்கள் கவலை

கோலாலம்பூர், ஜன 21 – கோலாலம்பூரில் பேராங்காடியிலுள்ள
உள்ள உணவகத்தில் விரும்பத்தகாத வாடிக்கையாளரை காட்டும் கிளிப் ஒன்று நெட்டிசன்களை திகிலடையச் செய்துள்ளதோடு அது உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தூண்டியது. TikTok பயனர் @nunu.lifter பகிர்ந்த கிளிப்பில் , ஒரு மேஜையின் கீழ் ஒரு எலி, அந்த உணவகத்தின் வளாகத்தில் சுற்றித் திரிவதைக் காட்டுகிறது. இந்த காணொளியை பகிர வேண்டிய கட்டாயம் இருப்பதாக பயனர் எழுதியுள்ளார்.

இதன்வழி பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அது தன்னிடமிருந்து வரவில்லை என்றால், அது இறுதியில் வேறொருவரிடமிருந்து வரும். எலியின் நடமாட்டம் இருக்கும் காணொளி வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் உணவின் தூய்மை குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!