Latestமலேசியா

ஜோகூர் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமா? மந்திரிபெசார் ஹபிஸ் விளக்கம்

இஸ்கந்தர் புத்ரி, மே 26 – ஜோகூர் மாநில அரசாங்க நிர்வாகத்திற்கான தவணைக் காலம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என்பதால் முன்கூட்டியே மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறாது என ஜோகூர் மந்திரிபுசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜோகூர் அரசாங்கத்திற்கான நிர்வாக தவணைக் காலம் இருப்பதால் மக்களின் நன்மைக்காக அடிப்படை வசதிகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் முழுமையான கவனம் செலுத்தப்படும் என
அவர் கூறினார்.

அரசியலில் வெவ்வேறு சிந்தாந்தத்தை நாம் கொண்டிருந்தாலும் ஜோகூர் சட்டமன்ற கூட்டத்தில் ஐக்கியம் காணப்பட்டது குறித்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓன் ஹபிஸ் இன்று தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!