
சிங்கப்பூர், ஜூன் 16 — நேற்று, ‘துவாஸ்’ துறைமுகத்தில் புதிதாக வழங்கப்பட்ட ‘கிரேன்’ கப்பல் கவிழ்ந்த நிலையில், அருகிலுள்ள உபகரணங்களுக்கு காயங்களும் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கவிழ்ந்த அந்த கிரேன் செயல்படாத ஒரு இடத்திற்கு (Berth) பொருட்களை அனுப்பும்போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம், கூறியுள்ளது.
அனைத்து செயல்பாட்டு ‘பெர்த்துகளும்’ முழுமையாக அணுகக்கூடியவை என்றும் துறைமுக நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்றும் துறைமுக ஆணையம் விளக்கியுள்ளது.
அச்சம்பத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேல் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.