Latestமலேசியா

‘நண்பா’ திட்டம் இந்திய இளைஞர்களுடனான அரசாங்கத்தின் உறவை வலுப்படுத்துகிறது -டத்தோ ஃபாஹ்மி பேச்சு

கோலாலம்பூர், ஜூன்-28 – தொடர்புத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் J-KOM அறிமுப்படுத்தியுள்ள ‘நண்பா’ திட்டம், இந்தியச் சமூகத்துடன் குறிப்பாக அதன் இளைஞர்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டை பிரதிபலிக்கிறது.

அதே நேரத்தில் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதையும் உறுதிச் செய்கிறது.

அரசாங்கக் கொள்கைகள், முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய தகவல்களைப் பொது மக்கள் அணுகுவதை மேம்படுத்துவதற்கும், ‘நண்பா’ திட்டம் பயனுள்ள இருவழி தொடர்பு தளமாக செயல்படுவதாக, அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

கோலாலம்பூர், பந்தாய் டாலாம், IWK Eco Park பூங்காவில் இன்று இந்த ‘நண்பா’ திட்டத்தைத் தொடக்கி வைத்து அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா தலைவருமான பி. பிரபாகரனும் கலந்துகொண்டார்.

மெர்பாவ் மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில், புதையல் வேட்டை, விளக்கக் கூட்டங்கள், அரசாங்க – தனியார் நிறுவன முகப்பு சேவை மற்றும் கண்காட்சி, வர்ணம் தீட்டும் போட்டி, ரஹ்மா மடானி விற்பனை, McDonald’s-சுடன் சிறார் மனமகிழ்வு நிகழ்வு, அதிர்ஷ்ட குலுக்கு போன்ற அங்கங்களும் உண்டு.

எனவே சுற்று வட்டார மக்கள் இதில் திரளாகப் பங்கெடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!