
கோலாலாம்பூர், மார்ச்-3-பினாங்கு இராமகிருஷ்ணா இல்லம் மாணவர்கள் 30 பேர் இன்று, நாடாளுமன்றத்தைப் பார்வையிட்டனர்.
பிரதமர் கேள்வி நேரம் நேரடியாக நடைபெறுவதை கண்டு, நாடாளுமன்ற செயல்முறை மற்றும் ஜனநாயக நடைமுறைகளை அவர்கள் நேரடியாக கண்டறிந்தனர்.
இப்பயணம், மாணவர்களுக்கு தேசிய பிரச்னைகள் எவ்வாறு விவாதிக்கப்படுகின்றன, தீர்வு காணப்படுகின்றன என்பதை அறிய ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.
மக்களவையில் இருந்தபோது, மாணவர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வரவேற்பறையில் சந்திக்கும் சிறப்பு வாய்ப்பையும் பெற்றனர்.
அப்போது, ஜெலுத்தோங் எம்.பி RSN ராயர், செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் இருவரும் உடனிருந்தனர்.
மாணவர்களுடன் அன்வார் அளவளாவி அவர்களுடன் குழுப்படமும் எடுத்துகொண்டார்.
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் Lim Hui Ying-குடனும் மாணவர்கள் புகைப்படம் எடுத்துகொண்டனர்.
இச்சந்திப்பு, குழந்தைகளுக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. நாட்டின் தலைவரை நேரில் காணும் அனுபவம், அவர்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்தது.
இராமகிருஷ்ணா இல்லம் மாணவர்களுக்கு இந்த கல்வி பயணம், சமூக பொறுப்பு மற்றும் தேசிய தலைமை குறித்த புரிதலை விரிவுபடுத்தியது.
ராயர் ஏற்பாட்டில் 2-நாள் கல்வி பயணம் மேற்கொண்டுள்ள அம்மாணவர்கள், பயணத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பத்து மலை முருகன் கோயிலையும் பார்வையிட்டனர்.
மொத்தத்தில், இந்த பயணம் மாணவர்களுக்கு அறிவும், ஊக்கமும், மறக்க முடியாத நினைவுகளும் வழங்கியது.



