
புத்ரா ஜெயா, ஜூன் 6 -மானிய விலையில் கிடைக்கும் திரவமய பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களை வர்த்தகர்கள் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் விதிமுறைகளை மறுஆய்வு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமது அலி ( Armizan Mohd Ali ) தெரிவித்தார். இந்தத் திருத்தங்கள் நுண் , சிறிய அளவிலான உணவு மற்றும் பான வர்த்தகர்களின் தேவைகளில் கவனம் செலுத்தும் என்றும் அந்த ஒழுங்குமுறை தொடர்பான தெளிவை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
2021 ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாடு விதிமுறைகள் திருத்தம், அல்லது PPKB (திருத்தம்) 2021, தற்போது எந்த நேரத்திலும் 42 கிலோவுக்கு மேல் திரவமாய இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் எந்தவொரு வணிகமும் திட்டமிடப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.
தனது அமைச்சின் தலைமைச் செயலாளர் தலைமையிலான தொழில்நுட்பக் குழு இந்த மறுஆய்வை மதிப்பீடு செய்யும் என்பதோடு , பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளைப் பெறும் என்றும் அர்மிசான் கூறினார். மறு ஆய்வு இறுதிமுடிவு செய்யப்படும்வரை , மானிய விலையில் சமையல் எரிவாயு சிலின்டர்களை பயன்படுத்துவது தொடர்பாக உணவு மற்றும் எரிவாயு துறையில் உள்ள நுண் மற்றும் சிறு வணிகங்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.