
கோலாலம்பூர், ஜூன் 11 – அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில், கோவிட்-19-இன் ‘ஓமிக்ரான்’ வகை நோய் தொற்றுகள் அதிகம் பரவி வருவதைத் தொடர்ந்து, மலேசியர்களும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்று பொது சுகாதார நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றனர்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் சமூக சுகாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ஷரிபா எசாத் வான் புத்தே கூறுகையில், ‘ஒமிக்ரான்’ துணை வகை நோய் தொற்றுகள் அதிகம் பரவும் தன்மை கொண்டவையாக இருப்பினும், அவை முந்தைய வகைகளுடன் ஒப்பிடும்போது கடுமையான நோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கின்றார்.
இருந்தபோதும் மலேசியர்கள் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
உலக சுகாதார அமைப்பு (WHO), ‘ஒமிக்ரான்’ துணை வகை தொற்றுகளின் வீரியத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.