
கோலாலம்பூர், ஜூன் 11 – பேராவின் கிரிக்கில் நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூடுதல் உதவி வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மரணம் அடைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரிங்கிட் கூடுதல் உதவி வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததாக ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் டத்தோ பாமி பாட்ஸில் தெரிவித்தார். மேலும் காயம் அடைந்த இதர மாணவர்களுக்கும் 5,000 ரிங்கிட் கூடுதல் உதவி வழங்கப்படும் என தகவல் தொடர்பு அமைச்சருமான தொடர்பு அமைச்சருமான பாமி கூறினார்.
மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்புறுதி அம்சங்களையும் விரிவாக ஆராய்ந்து கவனிக்கும்படி சட்டத்துறை தலைவர் துறைக்கு பிரதமர் பணித்துள்ளார். திங்கட்கிழமையன்று
கடந்த ஆண்டு, தெரெங்கானுவின் ஜெர்த்தேவிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிமை நோக்கிச் சென்ற வாடகைப் பஸ் ஒன்று , கிரிக்கிற்கு அருகே Jalan Raya Timur – Barat சாலையின் 53ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில் JRTB- பெரோடுவா அல்சா பல்நோக்கு வாகனம் (MPV) மீது மோதியதற்குப் பிறகு கவிழ்ந்ததில், பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பிச் கொண்டிருந்த மாணவர்களில் 15 பேர் மரணம் அடைந்தனர். அந்த பஸ்ஸின் ஓட்டுனர், உதவியாளர், 33 மாணவர்கள் மற்றும் Perodua Alza வின் ஓட்டுனரும் இதர மூன்று பயணிகளும் காயம் அடைந்தனர்.