
இஸ்லாமபாத், ஜூன் 30 – பாகிஸ்தானில் மழைக்காலம் தொடங்கியதால் நாடு முழுவதிலும் பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 45 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானுடன் எல்லையைக் கொண்டுள்ள Khyber Pakhtunkhwa மாநிலத்தில் மரணம் அடைந்ந் 21 பேரில் 10 சிறார்களும் அடங்குவர். Swat பள்ளத்தாக்கில் ஆற்றோரம் இருந்த குடும்பத்தினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 14 பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் எல்லைக்கு அருகிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் புதன்கிழமை முதல் 13 பேர் மரணம் அடைந்தனர். கடுமையான மழையின்போது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் எட்டு சிறார்களும் உயிரிழந்தனர்.
Sind மற்றும் Baochistan மாநிலத்திலும் திடீர் வெள்ளத்தினால் மேலும் 11 பேர் மரணம் அடைந்தனர். எதிர்வரும் சனிக்கிழமைவரை பாகிஸ்தானில் கடுமையாக மழை பெய்யும் என்பதால் திடீர் வெள்ளம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் பாகிஸ்தானில் நிகழ்ந்த மோசமான புயல் மழையில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர் .