
கோலாலம்பூர், ஜூன்-22 – பி.கே.ஆர் கட்சியின் இணைத் தேர்தல் இயக்குநர்களாக நூருல் இசாவும், டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
MPP எனப்படும் கட்சியின் மத்தியத் தலைமைத்துவ மன்ற மற்றும் அரசியல் பிரிவுக் கூட்டத்தில் அந்நியமனம் முடிவானது.
நூருல் இசா, டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியை வீழ்த்தி அண்மையில் புதியத் துணைத் தலைவரானார்.
அதே சமயம் உள்துறை அமைச்சரான சைஃபுடின், கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.
இவ்வேளையில், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தகவல் பிரிவுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் டத்தோ Dr ஃபுசியா சாலே பொதுச் செயலாளராகவும், வில்லியம் லியோங் பொருளாளராகவும் தொடருகின்றனர்.
இவ்வேளையில் கட்சிக்கு ஆற்றிய பணிக்காக டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லிக்கும், இதர தலைவர்களுக்கும் MPP நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக, டத்தோ ஃபாஹ்மி கூறினார்.
நடப்பு அரசியல் சூழல், உலகப் பொருளாதாரம், வரக்கூடிய சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது