
உலு சிலாங்கூர், டிசம்பர்-4 – சிலாங்கூர், புக்கிட் செந்தோசா அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் முதலாமாண்டு மாணவனை மோதிய வெளிநாட்டுப் பெண் கைதாகியுள்ளார்.
நவம்பர் 28-ஆம் தேதி மாலை 6.15 மணியளவில்
46 வயது அம்மாதுவின் நான்கு சக்கர வாகனம், 7 வயது அச்சிறுவனை மோதியது.
பள்ளி வேனிலிருந்து இறங்கியவன் சாலையைக் கடப்பதற்காக வேனின் பின்னால் சென்ற போது, அம்மாது ஓட்டி வந்த Mitsubishi Triton அவனை மோதியது.
அதில் அவனது இடது கால் எலும்பு முறிந்தது.
இந்நிலையில் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் மேல் விசாரணைக்காக அம்மாது கைதுச் செய்யப்பப்பட்டதாக, உலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் அஹ்மாட் ஃபைசால் தஹ்ரிம் (Ahmad Faizal Tahrim) தெரிவித்தார்.
எனினும் மேற்கொண்டு கருத்துரைக்க அவர் மறுத்து விட்டார்.