Latestமலேசியா

மீண்டுமொரு தீ விபத்து; சிம்பாங் பூலாயில் 5 தொழிற்சாலைகள் சேதம்

சிம்பாங் பூலாய், ஜூன் 23 – இன்று அதிகாலையில், பேராக் சிம்பாங் பூலாயில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து தொழிற்சாலைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித தீ காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரார்த்தனைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், வண்ணப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் மூலிகை தேநீர் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவைகள் 70 சதவீதம் சேதமடைந்துள்ளன
.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 4க்குள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!