Latestமலேசியா

லாரியுடன் கார் மோதியதில் கணவன் – மனைவி பலி; 3 பிள்ளைகள் படுகாயம்

பெக்கான், ஜூன்-18 – பஹாங், பெக்கானில் நேற்றிரவு காரொன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் – மனைவி பலியான வேளை, அவர்களின் 3 பிள்ளைகள் படுகாயமடைந்தனர்.

Lepar, Kampung Batu Lapan அருகே Jalan Kuantan – Segamat சாலையில் இரவு 10 மணிக்கு அவ்விபத்து ஏற்பட்டது.

மரணமடைந்தவர்கள் 44 வயது Jamal Azizul Samat மற்றும் அவரின் 41 வயது மனைவி Lizawati Abdullah என அடையாளம் கூறப்பட்டது.

குவாந்தானிலிருந்து ஜோகூரின் செகாமாட்டுக்கு Jamal ஓட்டிச் சென்ற கார், இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து வலப்புறச் சாலையில் தடம்புரண்டது.

அப்போது எதிர் திசையிலிருந்து வந்த லாரியுடன் கார் மோதியது.

அதில் Jamal-லும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அவரின் மனைவியும் உடல் நசுங்கி மாண்டனர்.

6 முதல் 17 வயதிலான 3 பிள்ளைகளும் படுகாயம் அடைந்து குவாந்தான் தெங்கு அம்புவான் அஃவ்சான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 31 வயது லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!