Latestஉலகம்மலேசியா

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுப்பிடிப்பு

புதுடில்லி – ஜூன் 13 – மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் விபத்துக்குள்ளானதில் 241 பேர் கொல்லப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்றை விமான அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளர். குஜராத்தின் தலைநகர் காந்திநகரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தெற்கே அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் லண்டன் சென்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இரண்டு கருப்புப் பெட்டிகளில், விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டியின் பதிவான தகவல்களை ஆய்வு செய்வதற்காக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குர் அலுவலகம் விமானத்தின் உபகரணங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விமானத்தின் முன் பகுதியில் உள்ள இரண்டாவது கருப்புப் பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை . கருப்புப் பெட்டிகள் விமானத்தில் உள்ள மின்னணு தரவுப் பதிவுக் கருவிகள். பிரகாசமான ஆரஞ்சு அல்லது மஞ்சள் செவ்வகப் பெட்டிகள் அதிவேக விபத்துக்கள், வெடிப்புகள், தீ மற்றும் நீர் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!