Latestஉலகம்

விஷக் காளானை உணவில் சேர்த்து மூவரை கொன்ற ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலியா, செப்டம்பர் 8 – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு விஷக் காளான் கலந்த உணவைக் கொடுத்து அவர்களைக் கொலை செய்த வழக்கில் கைதான 50 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, உலகின் மிகப்பெரிய விஷக் காளான்களைப் பயன்படுத்தி வீட்டில் மதிய உணவு தயாரித்து அதனை விருந்தினர்களுக்கு வழங்கி, அந்த மாது அம்மூவரின் உயிரிழப்பிற்கு காரணமாகியுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிர் தப்பிய மற்றொரு விருந்தினர் தற்போது உடல் உறுப்புகள் சேதமடைந்து, மிக மோசமான நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்செயலாகத்தான் காளானை சேர்த்தேன் என்று அப்பெண் வாதிட்டாலும், நீதிமன்றம் அவர் வேண்டுமென்றே கொலை செய்ததைக் கண்டுபிடித்து தீர்ப்பெழுதியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!