
சுங்கை பட்டானி, ஜூன் 17- கடந்த சனிக்கிழமை, பண்டார் அமான் ஜெயாவிலுள்ள வீடொன்றில் வாகன இழுவை லாரி நுழைந்த குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநருக்கு இன்று நீதிமன்றம் 2,800 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
24 வயதான மும்மது அய்மான் முட்சாகீர் அஸ்மி, 39 வயதுடைய பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது பெரோடுவா அல்சா வாகனத்தை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அக்குற்றம், குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர் நீதிபதியின் முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.