Latestமலேசியா

ஆடவன் கொலை அகதிகளுக்கான ஐ.நா அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு நபருக்கு வலைவீச்சு

கோலாலம்பூர், ஜூன் 12 – இரண்டு வாரங்களுக்குள், ஒரு நபர் தனது மனைவியை காய்கறி கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்திற்குப் பின்னர், மற்றொரு கொலை ஜோகூர், தங்காக் மாவட்டத்தில் உலுக்கியுள்ளது. இம்முறை நடந்த கொலையில் இரு வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டுள்ளனர். தங்காக், Jalan Kemajuanனில்
ஒரு வாடகை வீட்டில் நேற்றிரவு 7 மணியளவில் நடைபெற்ற சம்பவத்தில் கூர்மையான ஆயுதத்தினால் மியன்மார் ஆடவன் ஒருவன்
கத்தியால் குத்தப்பட்டு இறந்தான். கொலை செய்யப்பட்ட நபருக்கும் 24 வயதுடைய மியன்மார் பிரஜைக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தார்.

தப்பியோடிய அந்த ஆடவன் அகதிகளுக்கான ஐ.நா ஆணைக்குழுவின் அட்டை வைத்திருப்பதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Roslan Mohd Talib தெரிவித்தார். அந்த சந்தேகப் பேர்வழியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்னர். ஜூன் 2 ஆம்தேதியன்று புக்கிட் கம்பிர் , Taman Cahaya விலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தனது கணவரினால் கொல்லப்பட்டார். அந்த சந்தேகப் பேர்வழி மறுநாள் சரணடைந்த பின்னர்தான் இச்சம்பவம் போலீசிற்கு தெரியவந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!