
ஜோகூர் பாரு, மே 29 – கடந்த செவ்வாய்க்கிழமை, குகுப், ஸ்கூடாய் மற்றும் பத்து பஹாட் போன்ற பகுதிகளில் மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், நாட்டில் சட்டவிரோமாக புலம்பெயர்ந்த கடத்தல் கும்பல் மற்றும் “டெடி” என்று அழைக்கப்படும் 38 வயதான அக்கும்பல் தலைவன் ஆகியோர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சோதனையில் கும்பலின் தலைவன் உட்பட கைது செய்யப்பட்ட 11 நபர்களில் அனைவரும் 25 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) கூறுகையில், இந்த கும்பல் குறைந்தது ஆறு மாதங்களாக செயல்பட்டு வருவதாகவும், படகு மூலம் மலேசியாவிற்குள் நுழைவதற்கு ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரிடமும் தலா 2,100 ரிங்கிட் பணத்தை வசூலித்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்கின்றார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைகளுக்காக குடிவரவுத் துறையின் கிடங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு
நாட்டின் எல்லை இறையாண்மையைப் பாதுகாக்க புலம்பெயர்ந்தோர் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தமது துறை தீவி